அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை 24 மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட காவல்துறையினர்.!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்.

பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் யூனிஸ்- திவ்யபாரதி தம்பதியினருக்கு பிறந்த 5 நாட்கள் ஆன பெண் குழந்தை நேற்று அதிகாலை மர்ம நபர்களால் கடத்தப்பட்டது. சுமார் 250க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்ததில் 2பேர் குழந்தையை கடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து இன்று அதிகாலையில் கேரளா மாநிலம் கொடுவாயூர் பகுதியில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை கண்டுபிடித்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தை கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்றொரு நபரை தேடி வருவதாகவும் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.