ஒரு நாளுக்கு தேவையான எரிபொருள் மட்டுமே இலங்கையில் கையிருப்பு.!

இலங்கையில் ஒரு நாளுக்கு தேவையான எரிபொருள் மட்டும் கையிருப்பு உள்ளதால், அண்டை நாடுகளின் கடன் உதவியை இலங்கை அரசு எதிர்பார்த்துள்ளது.

எரிபொருள் வாங்க எண்ணெய் நிறுவனங்களுக்கு 587 மில்லியன் டாலர் வழங்க வேண்டியுள்ள நிலையில், இலங்கை மத்திய வங்கியால் 125 மில்லியன் டாலர் பணம் மட்டுமே திரட்ட முடிந்ததாக எரிசக்தித் துறை அமைச்சர் காஞ்சனா விஜயசேகரா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறையால் அடுத்த 5 நாட்களுக்கு அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டமும் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.