திருப்பூரில் கூலிப்படையை ஏவி மகனை கொலை செய்த தந்தை கைது.!

திருப்பூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக கூலிப்படை ஏவி மகனை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். 

முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் கடந்த 28ந்தேதி நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பாலசுப்பிரமணியத்தின் தந்தை உள்பட 2பேரை கைது செய்தனர்.

விசாரணையில் பாலசுப்பிரமணியம் மதுவுக்கு அடிமையாகி பணத்தை கண்டபடி செலவு செய்ததால், மகளுக்கு சொத்து எதுவும் இருக்காது என்று கருதி தந்தை அப்புகுட்டி கூலிப்படையை வைத்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.