பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கிவிட்டு 5 வயது பெண் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்கள்.!

வேலூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கிவிட்டு 5 வயது பெண் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொரப்பாடி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த அவரது தாயார் அம்சாவை சரமாரியாக தாக்கிவிட்டு மர்மநபர்கள் குழந்தையை கடத்திச் சென்றனர்.

தனது கணவர் ரவி யாதாவ் தான் ஆள் வைத்து குழந்தையை கடத்தி இருக்க வேண்டும் என பிரியா போலீசில் புகார் அளித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.