ஒரே தாக்குதலில் 200 ரஷ்ய வீரர்கள் பலி: உக்ரைன் நடத்திய அதிரடி தாக்குதல்!



ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்ய இராணுவ வசதிகள் மீது உக்ரைனிய படைகள் நடத்திய தாக்குதலில் 200 ரஷ்ய வீரர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைனின் கிழக்கு பகுதியில் தற்போது கவனம் செலுத்து வரும் ரஷ்ய படைகள், டான்பாஸ் பகுதியில் உள்ள பெரும்பாலான ரஷ்ய ஆதரவாளர்களின் பகுதிகளை உக்ரைனிய படைகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில், ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் மெலிடோபோல் நகரில் உள்ள ரஷ்ய இராணுவ தளத்தில் உக்ரைனிய படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுத் தொடர்பாக வெளிவந்துள்ள முதல்நிலை அறிக்கைகளின் அடிப்படையில், உக்ரைனிய படைகள் நடத்திய இந்த தாக்குதலில் சுமார் 200 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 300 ரஷ்ய வீரர்கள் வரை படுகாயம் அடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: அமெரிக்காவின் சுகந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு: கைது செய்யப்பட்ட மர்ம நபர்!

இதனைத் தொடர்ந்து, உக்ரைனிய படைகளின் தாக்குதலை கருத்தில் கொண்டு Melitopol-லில் உள்ள ரஷ்ய கூட்டுப்பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை தொடர பயப்படுகிறார்கள் எனத் அந்த பகுதியின் மேயர் Ivan Fedorov தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.