கார்வார் கடற்கரையில் துர்கா தேவி சிலை| Dinamalar

உத்தர கன்னடா, : உத்தர கன்னடா மாவட்டம், கும்டாவிலுள்ள கார்வார் கடற்கரையில், சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, கரையில் தங்க வளைவு போன்று தென்பட்டது.அதை பிடித்து வெளியே எடுக்கும்போது, 2.5 அடி உயர துர்கா தேவி சிலை வந்தது. இதனால் அங்கிருந்தோர் பரவசம் அடைந்தனர்.கடற்கரையில் துர்கா சிலை கிடைத்தது குறித்து அப்பகுதியினர் கூறுகையில்,

‘கோவிலில் உள்ள விக்ரஹம் சேதமடைந்தால், அதை கடலில் வீசிவிடுவர். புதிதாக சிலை வடிவமைத்து கோவிலில் வைப்பர். அதுபோன்று இந்த சிலை கடலில் வீசப்பட்டிருக்கலாம்’ என்றனர்.சம்பவ இடத்துக்கு வந்தே கோகர்ணா போலீசார், சிலையை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.