சுமார் 418 வருடங்களுக்கு பின் திருவட்டார் ஆதிகேசவர் கோவிலில் கும்பாபிஷேக விழா..!

சுமார் 418 வருடங்களுக்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவர் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதே போல, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலும் உறையூர் வெக்காளியம்மன் கோவிலிலும் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதிட கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.

திருவாரூர் குமரக்கடவுள் ஆலயத்திலும், நெல்லை வண்ணாரப் பேட்டையில் உள்ள பேராத்து செல்வி அம்பாள் ஆலயத்திலும் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.