விபத்தில் காயமடைந்த மகன்களை பார்க்க சென்ற போது விபத்தில் சிக்கிய தந்தை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விபத்தில் சிக்கி காயமடைந்த மகன்களை பார்க்க இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற தந்தையும் அதே பகுதியில் விபத்தில் சிக்கினார்.

திருப்பூரிலிருந்து பல்லடம் நோக்கி இருசக்கரவாகனத்தில் சென்ற சகோதரர்கள் இருவர், ராயர்பாளையம் அருகே விபத்தில் சிக்கினர். தகவலின் பேரில் மகன்களை காண, அவர்களது தந்தை இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றபோது, சாலையோர குழியில் இருசக்கர வாகனம் இறங்கியது.

இதில் நிலைதடுமாறிய அவர், சாலையில் விழுந்து காயமடைந்தார்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.