லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி பவானீஸ்வரி உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

சென்னை:  லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி பவானீஸ்வரி உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழக உள்துறை செயலாளர் பனிந்தீர ரெட்டி இன்று 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து  உத்தரவிட்டுள்ளார். அதன்படி,

லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி பவானீஸ்வரி, லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சென்னை அமல்படுத்துதல் பிரிவு ஐஜி துரை குமார், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமிக்கப்படுகிறார்.

கட்டாய காத்திருப்புப் பட்டியலில் இருந்த வந்திதா பாண்டே, புதுக்கோட்டை எஸ்.பி.-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.