மால்டோவா மீதான ரஷ்ய போர்: பிரதமர் நடாலியா கவ்ரிலிட்டா கவலை!


மால்டோவா மீது ரஷ்யாவின் படையெடுப்பு சாத்தியக்கூறுகள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என அந்த நாட்டின் பிரதமர் நடாலியா கவ்ரிலிட்டா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரானது பல மாதங்களை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ஆதரவாளர்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு உக்ரைனிய பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றும் நோக்கில் தற்போது ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், மால்டோவா மீது ரஷ்ய படைகளின் படையெடுப்பு சாத்தியம் மிகவும் கவலையடைய வைத்து இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மால்டோவா மீதான ரஷ்ய போர்: பிரதமர் நடாலியா கவ்ரிலிட்டா கவலை! | Moldova Pm Fearful Of Russian Invasion

மேலும் இது இப்போதைய கற்பனையான சூழ்நிலை, ஆனால் இராணுவ நடவடிக்கைகள் உக்ரைனின் தென்மேற்கு பகுதியிலும், ஓடேசாவை நோக்கியும் நகர்ந்தால், நிச்சயமாக நாங்கள் மிகவும் கவலைப்படுவோம் என மால்டோவா பிரதமர் நடாலியா கவ்ரிலிட்டா ஞாயிற்றுக்கிழமை CNN செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: பாலத்தில் இருந்து கவிழ்ந்த பேருந்து…பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!

மால்டோவா மீதான ரஷ்ய போர்: பிரதமர் நடாலியா கவ்ரிலிட்டா கவலை! | Moldova Pm Fearful Of Russian Invasion

அத்துடன் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணவும், சண்டை அதிகரிக்காமல் இருக்கவும் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம், இருப்பினும் சர்வதேச சட்டத்தை பொருட்படுத்தாமல் நாடு ஒன்று இணைப்புப் போரைத் தொடங்கினால், இந்த அர்த்தத்தில் யாரும் பாதுகாப்பாக இல்லை, பல நாடுகளும் போர் குறித்து கவலைப்படுவதாக நான் நினைக்கிறேன் என தெரிவித்தார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.