அண்ணனை கொல்ல முயன்று மாமனை கொன்ற மைத்துனர் – தேனியில் அதிர்ச்சி!

தங்கையின் கணவரை கத்தியால் குத்திக் கொன்று விட்டு அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் கிராமச்சாவடி தெருவில் வசிப்பவர்கள் சிவக்குமார் (29) அவரது தம்பி சங்கர் (27). கட்டிடத் தொழிலாளிகளான அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
image
இந்நிலையில், நேற்றிரவு இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதில் அண்ணன் சிவகுமாரை அவரது தம்பி சங்கர் கத்தியால் குத்த முயற்சித்துள்ளார். அப்போது இருவரையும் சமதானம செய்ய வந்த அவர்களின் தங்கை கணவர் காளிராஜ் (32) மீது கத்திக் குத்து விழுந்துள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவரை, சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
image
தான் கத்தியால் குத்தியதால் தங்கையின் கணவர் இறந்து விட்டார் என்ற வேதனையில் இருந்த சங்கர், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் கம்பம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.