கண்காணிப்பு கேமரா உபயம் ரூ.21 கோடி அபராதம் வசூல்| Dinamalar

பெங்களூரு : பெங்களூரின் முக்கியமான ஜங்ஷன்களில், புதிய தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள், போக்குவரத்து போலீசாருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கேமராக்கள் உதவியால், 21 கோடி ரூபாய் அபராதம் வசூலாகியுள்ளது.பெங்களூரின் வாகன நெருக்கடி அதிகம் உள்ள ஜங்ஷன்கள், முக்கியமான வர்த்தக இடங்களில், போக்குவரத்து போலீசாரின் உதவியின்றி, போக்குவரத்தை நிர்வகிக்க, மார்ச் 1ல், இருபது இடங்களில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட, கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தினர்.

இந்த கேமராக்கள், போக்குவரத்து விதிகளை மீறி, அபராதம் செலுத்தாமல் நடமாடும் வாகன பயணியரை கண்டுபிடிக்க, போலீசாருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியது குறித்து, 3.90 லட்சம் வழக்குகளை கண்டுபிடித்து, 21 கோடி ரூபாய் அபராதம் வசூலித்தனர்.அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட, கண்காணிப்பு கேமராக்கள், சாலைகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை கண்காணிக்கின்றன. இந்த பதிவு எண் வாகனங்கள், கோக்குவரத்து விதிகளை மீறியிருந்தால், அருகில் பணியில் உள்ள போலீசாரின் மொபைலுக்கு, தகவல் அனுப்பும்.இந்த தகவல் அடிப்படையில், போலீசார் அந்த பதிவு எண் கொண்ட வாகனங்கள் அருகில் வந்தவுடன், தடுத்து நிறுத்தி அபராதத்தை வசூலிக்கின்றனர். போக்குவரத்து விதிகள் மீறுவதை கட்டுப்படுத்த, இந்த கேமராக்கள் உதவியாக உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.