குடியரசுத்தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது!

 தலைவர் யிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசுத்தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற  காங்கிரஸ் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை இன்று இரண்டாவது முறையாக விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் பேரணி செல்ல முயன்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து குடியரசுத்தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்ததால் ராகுல்காந்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.