நாளை செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தால் போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்பு

சென்னை

சென்னை நகரில் நாளை செஸ் ஒலிம்பியாட் ஓட்டம் நடைபெற  உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நாளை சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது.   இந்த நிகழ்வு நாளை மாலை 4 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது.  ஜோதி ஓட்டம் மாநிலக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் வரை நடைபெற உள்ளது.

அதாவது ஜோதி ஓட்டம் மாநில கல்லூரி மைதானத்திலிருந்து துவங்கி காமராஜர் சாலை, ராஜாஜி சாலை கொடிமரச் சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை, சென்ட்ரல் சதுக்கம், ஈவெரா சாலை, ராஜா முத்தையா சாலை வழியாக நேரு உள் விளையாட்டரங்கம் ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது.   ஆகவே இத சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.

சென்னை காவல்துறை மேற்கண்ட வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தங்கள் பயணத் திட்டத்தினை அதற்கேற்ப வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்றும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரத் திட்டமிட்டுள்ளவர்களும் சற்று முன்பாகவே பயண நேரத்தினை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.