பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நடந்த நிதி மோசடி தொடர்பான வழக்கில் அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கத்தில் நடந்த நிதி முறைகேடு தொடர்பான விவகாரத்தில் பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி, சங்கத்தில் பணியாளர்களை நியமித்து, பிசிசிஐ அளித்த நிதியை தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி இருந்தது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லாவிடம் பல முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து ஆக.,27ல் பரூக் அப்துல்லா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.