ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நடந்த நிதி மோசடி தொடர்பான வழக்கில் அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கத்தில் நடந்த நிதி முறைகேடு தொடர்பான விவகாரத்தில் பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி, சங்கத்தில் பணியாளர்களை நியமித்து, பிசிசிஐ அளித்த நிதியை தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி இருந்தது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லாவிடம் பல முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து ஆக.,27ல் பரூக் அப்துல்லா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நடந்த நிதி மோசடி தொடர்பான வழக்கில் அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்