பீகார் முதலமைச்சருக்கு கொரோனா தொற்று – அரசு சொல்வது என்ன?

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் மேலும் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.

அது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் விவாதங்களுக்கு மத்தியில், ஜேடியு தலைவர் உபேந்திர குஷ்வாஹா பதவியேற்பு விழாவில் நிதீஷ் குமார் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்த செய்தி வந்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2-3 நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்”

இவ்வாறு முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.