’48 ஆண்டு வாழ்க்கை’ இறப்பிலும் இணைபிரியாத தம்பதி..கணவர் இறந்த சோகத்தில் உயிரிழந்த மனைவி

குத்தாலத்தில் கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கீழ காலனியைச் சேர்ந்தவர் குணசீலன் (வயது 74). இவருடைய மனைவி தமிழரசி (வயது 68). இவர்களுக்கு திருமணமாகி 48 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்துவைத்த தம்பதிகள் மகிழ்ச்சியாக தங்களது பூர்வீக வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக குணசீலன் இன்று அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார்.
image
48 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த தனது கணவர் பிரிந்த துக்கம் தாங்காமல் அடுத்த சில மணி நேரங்களிலேயே மயங்கி விழுந்து தமிழரசியும் உயிரிழந்தார். இதனை அடுத்து உறவினர்கள், மகன் இளையராஜா ஆகியோர் இறந்த தம்பதியினருக்கு முறைப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டு இருவரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.