அப்துல் கலாம் நினைவு தினம்: ஓவியம் வரைந்து மலரஞ்சலி செலுத்திய மாணவர்கள்

டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினத்தை கடைபிடிக்கும் வகையில், 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அப்துல் கலாம் ஓவியத்தை வரைந்து நினைவஞ்சலி செலுத்தினர்.
மயிலாடுதுறை சேந்தங்குடி குருமூர்த்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இன்று அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்களின் ஓவியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. சூரிய ஒளியில் ஓவியம் வரையும் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், பென்சில் ஆர்ட் மூலம் அப்துல் கலாம் உருவ ஓவியத்தை வரைந்தார்.
image
அதனை பார்த்து 250க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் அப்துல் கலாம் ஓவியத்தை வரைந்தனர். தொடர்ந்து அப்துல் கலாம் ஓவியத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஞானவேலன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சிறப்பான ஓவியம் வரைந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.