ஆண்மையற்றவர் என்பதை மறைத்து 200 பவுன் நகை வாங்கி திருமணம் -வழக்குப்பதிய உத்தரவு

தான் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்த நபர் மீது ஐபிசி 417,420 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 4 வாரத்தில் விசாரணை செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, மதுரை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இர்பானா ரஸ்வீன் தனது கணவர் மீதான முதல் தகவல் அறிக்கையில் சில பிரிவுகளை சேர்க்கக்கோரி மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், “மனுதாரரின் கணவர் ஆண்மையற்றவராக இருந்ததை மறைத்து திருமணம் செய்து 200 சவரன் நகை, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை வரதட்சணையாக பெற்றுள்ளனர்.
image
திருமணத்திற்கு பின்பு தெரியவந்த நிலையில் கணவர் தலாக் முறையில் விவாகரத்து கூறிவிட்டு அமெரிக்கா சென்று விட்டார். இதுதொடர்பாக மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில் சமூக நலத்துறை அலுவலகத்தில் முதற்கட்ட விசாரணை நடைபெற்று, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் கணவர் மீது தவறு இருக்கும் சூழலில் அதை மறைத்து திருமணம் செய்துள்ளார். ஆகவே, மனுதாரரின் கணவர் மீது 417, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நான்கு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.