கொரோனா: 1076 பேருக்கு சிகிச்சை | Dinamalar

புதுச்சேரி, : புதுச்சேரி மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து, தினசரி பாதிப்பு 200ஐ தாண்டியது. நேற்று முன்தினம் 1841 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் புதிதாக 99 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 1,70,278 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 17 பேரும், 1059 பேர் வீட்டு தனிமையில் என மொத்தம் 1076 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் 254 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,67,237 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 182 பேர் முதல் தவணை தடுப்பூசி, 978 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 4720 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.