தற்கொலை படை தாக்குதல் சோமாலியாவில் 11 பேர் பலி| Dinamalar

மொகாடிஷு:சோமாலியாவில் அரசு அலுவலகம் ஒன்றின் நுழைவாயிலில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில்ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதிகாரிகள் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்தபோது, மர்ம நபர் ஒருவர் தன்னிடமிருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில், பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ‘அல் – -ஷபாப்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.