ரூ.3,419 கோடி! ஷாக் அடித்த கரண்ட் பில்லால் ஹவுஸ் ஓனருக்கு தீவிர சிகிச்சை!

மத்தியப் பிரதேசத்தில் மாத மின்கட்டணமாக 3 ஆயிரத்து 419 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்ததால், வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்.
குவாலியரைச் சேர்ந்த பிரியங்கா என்பவரது வீட்டிற்கு மாத மின் கட்டணமாக 3,419 கோடி ரூபாய் செலுத்தவேண்டும் என எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. இதனை பார்த்த பிரியங்காவுக்கு ரத்த அழுத்தம் அதிகமான நிலையில் இதய நோயாளியான அவரது மாமனாருக்கோ அதிர்ச்சியில் மயக்கமே வந்துவிட்டது. தகவலறிந்த மத்தியப் பிரதேச மின்சாரத்துறை அதிகாரிகள், மின் கட்டணம் ஆயிரத்து 300 ரூபாய்தான் என்றும் தங்களது ஊழியர் ஒருவரின் தவறே மின் கட்டணம் அதிகமாக வர காரணம் எனவும் விளக்கமளித்தனர்.

அதிர்ச்சியில் மயங்கிவிழுந்த வீட்டின் உரிமையாளர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.