ஓடும் ரயிலில் பாம்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில்  இருந்து டெல்லி நிசாமுதீனுக்கு நேற்று முன்தினம் மதியம் எக்ஸ்பிரஸ் ரயில்  புறப்பட்டுச் சென்றது. இரவு 9.45 மணியளவில் திரூர் ரயில்  நிலையத்தை தாண்டி ரயில் சென்றபோது, ஒரு முன்பதிவு  பெட்டியில் பாம்பு புகுந்தது. இதை பார்த்து பயணிகள் அலறினர். அப்போது, ஒரு பயணி  கம்பியால் பாம்பை அடிக்க முயன்றார். ஆனால், சில பயணிகள் அவரை தடுத்தனர்.   பாம்பு  பெட்டிக்குள் மறைந்தது. கோழிக்கோடு நிலையத்தை  ரயில் அடைந்ததும், ரயில்வே  போலீசார் வந்து,  பயணிகளை வெளியேற்றி விட்டு பெட்டியில் சோதனை செய்தனர். ஆனால், பாம்பு  சிக்கவில்லை. இதனால், வேறு வழியின்றி பயணிகள் மீண்டும் அந்த பெட்டியில்  பீதியடன் பயணம் செய்தனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.