குஜராத் மாநில பொதுத்தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி அங்கு பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி குறிவைத்துள்ள மாநிலங்களில் முக்கியமானது குஜராத். அம்மாநில பொதுத்தேர்தல் இந்த வருட இறுதியில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தலில் கணிசமான வெற்றிகளை பெறுவதற்காக அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.
ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி, குஜராத் மாநிலத்தின் ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து குழுக்களையும் சமீபத்தில் கலைத்து தேர்தலுக்கு ஏற்றவாறு புதிய குழுக்களை உருவாக்கியது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி அன்று டெல்லி முதலமைச்சரும் அக்கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மாநிலம் செல்கிறார். அங்கு சோம்நாத்தில் நடைபெறும் அக்கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகஸ்ட் 6,7 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும் குஜராத் மாநிலத்தின் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்துக்கு வெளியே போராடும் எம்.பி.க்களை அலறவிடும் கொசுக்கள்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM