சோழ வம்சத்து ராணி செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு.!

சோழ வம்சத்து ராணி செம்பியன் மகாதேவி உலக சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நாகை கைலாசநாதர் கோவிலில் உள்ள செம்பியன் மகாதேவி சிலை போலியானது. 

1929 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து செம்பியன் மகாதேவி சிலை கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. செம்பியன் மகாதேவி சிலை சோழ வம்சத்தை சார்ந்த 1000 வருடங்களுக்கும் மேல் பழமையான உலோக சிலையாகும். 

10ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழப் பேரரசர் கண்டராதித்தரின் பட்டத்தரசி செம்பியன் மகாதேவி ஆவார். செம்பியன் மகாதேவி உலக சிலையை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.