‘தப்பா புரிஞ்சுகிட்டீங்க… அந்த நிர்வாணக் காட்சி இப்படித்தான் எடுத்தாங்க!’ ரகசியத்தை உடைத்த ‘இரவின் நிழல்’ நடிகை

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குநர் என்று பெயரெடுத்தவர் பார்த்திபன். நடிகர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட பார்த்திபன், ஒத்த செருப்பு படத்திற்கு பிறகு இயக்கியுள்ள படம் இரவின் நிழல். 2 வரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இந்த படம் உலகின் முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்று கூறி பிரமோட் செய்யப்பட்டது.

இது தொடர்பாக சில சர்ச்சையான கருத்துக்கள் வந்தாலும் இரவின் நிழல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல் படத்தில் நாயகியாக நடித்த அறிமுக நடிகை பிரிஜிடா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருப்பதாக கூறப்பட்டது. இந்த காட்சி குறித்து சமூகவலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட நிலையில், இப்படியான காட்சி படத்தில் இருக்கிறதா என்று ஒரு சிலர் ஆச்சரியமடைந்தனர்.

இந்நிலையில், தற்போது இந்த நிர்வாணக் காட்சியைப் பற்றி விளக்கம் அளித்துள்ள நடிகை பிரிஜிடா, அந்த காட்சியை எப்படி செய்தேன் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். நிர்வாணமாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க தோலைப் போன்ற எலாஸ்டிக் கொண்ட ஸ்கின் கலர் டாப் அணிந்திருந்ததாக பிரிஜிடா விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில், “ஒரு புள்ளியைத் தவிர அனைத்தும் சரியாக உள்ளன. அது ஒரு நிர்வாணக் காட்சி, ஆனால், அந்த காட்சியை ஷூட் செய்யும்போது நான் மேலாடையும் அணிந்திருந்தேன். எல்லோரும் தவறாகப் புரிந்து கொண்டனர். மேலும் படத்தில் நான் நிர்வாணமாக அமர்ந்திருந்ததைப் போல சிறுபடத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை பரப்ப வேண்டாம். முடிந்தால் இதை பரப்புங்கள் என்று கூறியுள்ளார்.

இரவின் நிழல் ஒரு 50 வயது முதியவர் தனது வாழ்க்கையைத் நடந்த சம்பவங்களை பற்றி நினைத்து பார்க்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையை ஒரே ஷாட்டில் படமாக்குவதற்காக, 64 ஏக்கர் நிலத்தில், பெரிய பட்ஜெட்டில், 50 செட்களை அமைத்து படமாக்கப்பட்டதாக பார்த்திபன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.