பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – தொழிலாளி உயிரிழப்பு

பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி நாகராஜ்(54). இவர் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு, கரிசல்பட்டியை சேர்ந்த மலைசாமி(48) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது மேலக்கோட்டை பெரியார் காலனி சர்வீஸ் சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பின்னால் அமர்ந்திருந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். மேலும் மலைசாமி காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து திருமங்கலம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.