சென்னை: நாட்டைச் செழிக்கச் செய்யக்கூடிய வல்லுனர்கள் மாணவர்கள் தான் என்று அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அனைவருக்கும் கல்வி என்பதே, திராவிட மாடல் அரசின் கொள்கை ஆகும். மேலும் தமிழர்கள் எப்போதும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.