தொடர் கைதுகள்! அமைதி போராட்டத்திற்கு தயாராகும் காலி முகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர்கள்(Video)


காலி முகத்திடலில்  முன்னெடுக்கப்பட்டு வரும்  போராட்டக்களத்தில் நாளுக்கு நாள் மக்களின் வருகை குறைவடைந்து வருகின்றது. 

புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கைதுகள் காரணமாக இவ்வாறு மக்களின் தொகை குறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்களத்தில் ஆரம்ப நாள் தொடக்கம் செயற்பட்டு வந்த முன்னணி செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்னும் கைது செய்யப்படவுள்ளனர். 

அமைதி ஆர்ப்பாட்டத்திற்கு தயார்..

தொடர் கைதுகள்! அமைதி போராட்டத்திற்கு தயாராகும் காலி முகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர்கள்(Video) | Sri Lanka Protest Today

இந்த நிலையில், குறித்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முன்னணி செயற்பாட்டாளர்களுக்கு  ஆதரவு தெரிவித்தும் தற்போது  காலி முகத்திடலில் சிறப்பு கூட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது. 

இந்த கூட்டத்தில் சிவில் செயற்பாட்டாளர்கள், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், பௌத்த தேரர்கள் அதேபோல இஸ்லாமிய மத குருக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

அத்துடன், அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பிக்கவும் அவர்கள் தயாராகி வருகின்றனர்.

தொடர் கைதுகள்! அமைதி போராட்டத்திற்கு தயாராகும் காலி முகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர்கள்(Video) | Sri Lanka Protest Today

தொடர் கைதுகள்! அமைதி போராட்டத்திற்கு தயாராகும் காலி முகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர்கள்(Video) | Sri Lanka Protest Today

தொடர் கைதுகள்! அமைதி போராட்டத்திற்கு தயாராகும் காலி முகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர்கள்(Video) | Sri Lanka Protest Today



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.