டெல்லியில் பெண் ஒருவருக்கு முதன்முறையாக குரங்கம்மை நோய் உறுதி! இந்தியாவில் மொத்த பாதிப்பு 9 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெண்ணுக்கு குரங்கு அம்மை தொற்று  டெல்லியில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் நாட்டின் மொத்த குரங்கம்மை நோய்  பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவை தொடர்ந்து உலக நாடுகளை மிரட்டி வருகிறது குரங்கு அம்மை எனப்படும் தொற்று நோய். இந்த நோய் 75க்கும் மேற்பட்ட நாடுகளில்  பரவி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.  சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த கேரளாவை சேர்ந்த இளைஞருக்கு இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.  திருச்சூரில்  ஒரு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இறந்தார். இதனால், மக்கள் பீதியில் உள்ளனர். இதனிடையே கேரளா, டெல்லியில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியாகியுள்ள உள்ளது.நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண் ஆவார். வெளிநாடுகளுக்கு ஏதும் செல்லாத நிலையில் அப்பெண் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு காய்ச்சல், தோல் புண்கள் உள்ளன. அவரின் ரத்த மாதிரி புனேவில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளளார். இதனால் டெல்லியில் குரங்கம்மை பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.  நாட்டின் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

குரங்கு நோய்க்கு எதிராக போராட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 70 தனிமைப்படுத் தப்பட்ட அறைகளை அமைத்துள்ளது. குரங்கு நோய் நெருக்கடியைச் சமாளிக்க 6மருத்துவமனைகளில் எழுபது தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லியின் மாநில அரசுதெரிவித்துள்ளது.  மேலும், தேவைப்பட்டால் மேலும் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை சேர்க்கலாம் என்றும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் 20 தனிமைப்படுத்தப்பட்ட அறைகள், ஜிடிபி மருத்துவமனையில் தலா 10, டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனை, கைலாஷ் தீபக் மருத்துவமனை, எம்டி சிட்டி மருத்துவமனை, துக்ளகாபாத் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பத்ரா மருத்துவமனை உள்பட 6 மருத்துவமனைகளில் குரங்கம்மை நோய் சிகிச்சைக்காக தனிவார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளையும் மத்திய சுகாதாரத்  துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா நேற்று வலியுறுத்தினார். மேலும், இந்நோய் பரவலை கண்காணிக்க சிறப்பு நடவடிக்கை குழுவையும் அமைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.