தமிழகத்தில் 6 ஐ.எஸ்.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்.!

சென்னை: தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இது வழக்கமான நடைமுறை என்று கூறப்படுகிறது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஜவகர், கார்த்திக், மணிவாசன், மங்கத்ராம் சர்மா, ஆனந்த், மதுமதி  ஆகிய 6  பேரை இடமாற்றம் செய்து தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி,

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக (சிட்கோ) மேலாண் இயக்குநராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளராக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநராக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.