கியூட் நுழைவு தேர்வில் 2வது நாளாக குளறுபடி: பல இடங்களில் தேர்வு ரத்து

புதுடெல்லி: கியூட் எனப்படும் பொது நுழைவு தேர்வின் முதல்கட்ட தேர்வு. கடந்த மாதம் முதல் கட்ட தேர்வு முடிந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள 489 மையங்களில் 2ம் கட்ட தேர்வு நேற்று முன்தினம் காலை துவங்கியது.  காலை 9 மணிக்கு ஒரு தேர்வும் (முதல் ஷிப்ட்), மதியம் 3 மணிக்கு (2வது ஷிப்ட்) இன்னொரு தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்,  நிர்வாக மற்றும் தொழில்நுட்ப குளறுபடிகளினால் பல மையங்களில் தேர்வு துவங்குவது தாமதமானதால் மாணவர்கள் அவதிக்குள்ளாயினர். இதையடுத்து, முதல் ஷிப்ட் தேர்வு வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2வது ஷிப்ட் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக  வரும் 12 முதல் 14ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2வது நாளாக நேற்றும் பல மையங்களில் தேர்வு துவங்குவது காலதாமதமானது. இதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். ஆனால், நாட்டில் உள்ள 95 சதவீத மையங்களில் தேர்வு சமூகமாக நடைபெற்றதாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.