சாலை விபத்தில் தொழிலாளி பலி| Dinamalar

பாகூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம், சோழம்பூண்டி திரவுபதியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 45; கூலித் தொழிலாளி. இவருக்கு கஸ்துாரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.கடந்த 3ம் தேதி வெங்கடேசன், முள்ளோடையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின், அன்று இரவு 11.30 மணியளவில் அங்கிருந்து தனது டி.என். 32 ஏ.கியூ 8356 என்ற பதிவெண் கொண்ட டி.வி.எஸ். எக்ஸ்.எல் ஸ்கூட்டரில் புறப்பட்டார்.

புதுச்சேரி – கடலுார் சாலை கன்னியக்கோவில் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, அவர் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கிழே விழுந்துள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் வெங்கடேசன் மீது மோதியது. இதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி கஸ்துாரி அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.