உக்ரைன் ஆயுதக்கிடங்கு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.. நேட்டோ வழங்கிய 45,000 டன் வெடிமருந்து அழிப்பு..!

உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பால் வழங்கப்பட்ட 45,000 டன் வெடி மருந்தை ஏவுகணை வீசி அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மிகோலைவ் நகரில் உள்ள அந்த ஆயுத கிடங்கு மற்றும் டோனட்ஸ்க் பகுதிகளில் உள்ள உக்ரைன் நிலைகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தின.

போர் ஆரம்பித்தது முதல், உக்ரைன் படைகளுக்குச் சொந்தமான 263 போர் விமானங்கள், 4,000 க்கும் மேற்பட்ட பீரங்கிகள், 3,000 க்கும் மேற்பட்ட சிறிய ரக பீரங்கிகளை தகர்த்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.