கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்து – ஓட்டுநர் உயிரிழப்பு

சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி புளிய மரத்தில் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பொட்டியம் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பிரகாஷ்(24). இவர் நேற்று காலை மின்னாம்பள்ளியில் இருந்து டிப்பர் லாரியில் ஜல்லி ஏற்றிக் கொண்டு கருமந்துறை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது வாழப்பாடி அருகே பேளூர்-அயோத்தியாபட்டணம் சாலையில் சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். மேலும் லாரியில் இருந்த தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வாழப்பாடி காவல் துறையினர், உயிரிழந்த பிரகாஷின் உடலை மீட்டு பிரயோஜ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.