#Breaking: தஞ்சாவூர் சாஸ்திரா கல்லூரி.. ஏரியில் கட்டப்பட்டதா.? தமிழக அரசுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.! 

அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது தஞ்சைப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தியுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு, “நீர்நிலையில் சாஸ்திரா பல்கலைக்கழகம் அமைந்திருப்பதால், அதற்கு மாற்று இடம் வழங்க முடியாது. இது சாஸ்திராவுக்கு பொருந்தாது.” என்று தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, இது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு முடிகின்ற வரை சாஸ்திரா கல்வி நிறுவன கட்டிடம் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்றும் நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.