சுகாதார மையங்களே இலக்கு – கேரள சுகாதாரத் துறை அமைச்சர்

”அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களையும் குடும்ப சுகாதார மையங்களாக மாற்றுவதே அரசின் நோக்கம்” என, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பேசினார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் திருமிற்றக்கோடு குடும்ப சுகாதார மையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புற நோயாளிகள் பிரிவு கட்டடத்தை, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் துவக்கி வைத்தார்.பின்னர், அவர் பேசுகையில்,”இக்கட்டடம், 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அரசின் சுகாதார திட்டங்களில் ஒன்றான மக்கள் நல திட்டத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருவதால், அதை விரிவு படுத்தவுள்ளோம். அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களையும், குடும்ப சுகாதார மையங்களாக மாற்றுவதே அரசின் நோக்கம்,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.