சுதந்திர தின கொண்டாட்டம்: இனிப்புகள், வாழ்த்துக்களைப் பரிமாறிய இருநாட்டு வீரர்கள்

புதுடெல்லி:
சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு வீரர்கள் இனிப்புகள், வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டனர்.

நாட்டு விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டிப் பஞ்சாப் மாநிலம் அட்டாரி – வாகா எல்லைச் சாவடியில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்களும், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் ஒருவருக்கொருவர் இனிப்புகளைப் பரிமாறி வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டனர்.

பாகிஸ்தானின் சுதந்திர நாள் இன்றும், இந்தியாவின் சுதந்திர நாள் நாளையும் கொண்டாடப்படும் நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக இருநாட்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.