'யு ஆர் நெக்ஸ்ட்!' – ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல்!

ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, 75, மீது, மர்ம நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், சல்மான் ருஷ்டிக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதலில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது, வெண்டிலேட்டர் உதவி இல்லாமல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய 24 வயதான ஹடி மடர் என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Salman Rushdie: சல்மான் ருஷ்டி உடல்நிலையில் முன்னேற்றம் – பேச முடியும் என தகவல்!

இந்நிலையில், சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பிரபல எழுத்தாலர் ஜே.கே.ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. ஹாரி பாட்டர் கதையை எழுதி பிரபலமான ஜே.கே.ரவுலிங், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், “அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி. உடல்நிலை சரியில்லாதது போல் உணருகிறேன். அவர் நலமுடன் இருக்கட்டும்” என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், மீர் ஆசிப் அஜீஸ் என்ற பெயரில் ட்விட்டர் கணக்கு கொண்ட நபர், ‘கவலைப்பட வேண்டாம் அடுத்து நீங்கள் தான்’ என கொலை மிரட்டல் விடுத்து ட்வீட் செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.