Salman Rushdie: சல்மான் ருஷ்டி உடல்நிலையில் முன்னேற்றம் – பேச முடியும் என தகவல்!

அமெரிக்காவில், கத்தியால் குத்தப்பட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சல்மான் ருஷ்டி, 75. பிரபலமான எழுத்தாளராகிய இவர் எழுதிய, “சாத்தானின் வேதங்கள்” என்ற நூல், சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி, அவருக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து, எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பல்வேறு தரப்பினர் மிரட்டல் விடுத்து வந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டார். அப்போது திடீரென்று மேடை ஏறிய மர்ம நபர், சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், அவருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

Salman Rushdie: ‘சல்மானை கத்தியால் குத்திய’…ஹாதி மாடர் குறித்த 5 முக்கிய தகவல்கள்: தீவிரவாத அமைப்புடன் தொடர்பு?

இதை அடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு கண் பார்வையை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவரது முகவர் ஆண்ட்ரூ வைலி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “வெண்டிலேட்டர் உதவி இல்லாமல் சல்மான் ருஷ்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரால் பேச முடியும் என்றும்” தெரிவித்தார். எனினும் மேலும் பல விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.