பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் பங்களிப்புடன் நேற்று(17) முதல் பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசி நெல் 120 ரூபாவுக்கும், சம்பா நெல்லை ஒரு கிலோ கிராம் 125 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் கீரி சம்பா நெல் 130 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக 2,000 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் 30,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

அரிசி உற்பத்தியாளர்கள் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதைத் தடுப்பதற்காகவே நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்வதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதத்திற்குள் ஐந்து இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தற்போது நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.