டெல்லியில் புதிதாக 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி,

வட இந்தியாவில் காய்ச்சல், தொண்டையில் கரகரப்பு, இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட மேல் சுவாசக் குழாய் தொடர்பான அறிகுறிகளைக் கொண்ட ஏராளமான நோயாளிகள் எண்ணிக்கை சமீப நாட்களில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 20,844 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 90 ஆயிரத்து 355 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,939 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,57,121 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 826 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், டெல்லியில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.