மீண்டும் ஒன்றிணைவோம்: எடப்பாடிக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இதனால் இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் உருவானது.

பழையபடி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மகிழ்ச்சியடைந்தது.

இந்நிலையில் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் மீண்டும் இணைந்து செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால்

தரப்போ நேற்றைய தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை திங்கள் கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.