லாலு பிரசாத் யாதவுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு.!

பீகாரில் பாஜகவை விட்டு விலகி புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ்குமார், நேற்று ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவை அவர் இல்லத்தில் சந்தித்தார்.

தோள்பட்டை காயம் காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில் பாட்னா திரும்பிய லாலு பிரசாத்தை நிதிஷ்குமார் நேரில் சந்தித்து மலர்கொத்து அளித்து நலம் விசாரித்ததோடு, புதிய அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள், புதிதாக நியமிக்கப்பட்ட கூட்டணி அரசின் அமைச்சர்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.