கோவையில் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை!

கோவையில் முதுகலை பட்ட படிப்பு படிக்கும் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த பிரவின் அன்னதத்தா (33) இவர் எம்பிபிஎஸ் (இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவையியல்) அங்குள்ள மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரியில் முதுகலை பட்டத்தில் மருத்துவ பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

இவர் கோபாலபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி பயின்று வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மருத்துவ கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில்  மருத்துவ கல்லூரி மாணவருக்கு அவரது பெற்றோர்கள் தொலைபேசி வாயிலாக அழைத்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை, இதனையடுத்து சந்தேசகம் அடைந்த பெற்றோர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது கல்லூரி மாணவர் விடுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பந்தய சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இவர் ஏற்கனவே படித்து முடித்த சான்றிதழ்கள் பெற முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.