புலியாக மாறும் ஓபிஎஸ்… முட்டுக்கட்டை போடும் எடப்பாடி; அதிமுகவில் அடுத்த ட்விஸ்ட்!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்ததை அடுத்து,

தரப்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இனி கசந்த காலங்கள் வசந்த காலமாக மாறும் என்று கூறிவிட்டு, தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு புறப்பட்டு சென்று விட்டார். இதையொட்டி மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தங்கியுள்ளனர். அவரை காண அதிமுக நிர்வாகிகள், ஆதரவாளர்கள் என பலரும் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

இதனால் பெரியகுளம் பண்ணை வீடு களைகட்டி காணப்படுகிறது. குறிப்பாக அரவக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ பி.எஸ்‌.கந்தசாமி, கரூர் மாவட்ட விவசாய அணி செயலாளர் இளங்கோ, அரவக்குறிச்சி அம்மா பேரவை நகர செயலாளர் மகாலிங்கம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாசறை செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ்சை சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் உடனிருந்தார். இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசிய சையது கான், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி என்று சொல்லும்

தான் உண்மையான துரோகி. எம்.ஜி.ஆர் கண்ட ஒற்றுமையான அதிமுக பிளவுபட்டதால் தான் தேர்தலில் தோல்வியை சந்தித்தது.

எனவே எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டுமென்றால் அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி வருகிறார். ஆனால் அதிமுக ஒன்றிணைவதற்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டையாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். எப்படியும் கட்சியை தன் வசப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். ஓ.பன்னீர்செல்வத்தை பசுந்தோல் போர்த்திய புலி என்று ராஜன் செல்லப்பா கூறியிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் பசு தான். அவர் புலியாக மாறி இப்படி பேசுபவர்களை அடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதிமுகவில் தினகரனையும் சசிகலாவையும் இணைக்க வேண்டும் என்ற தேனி மாவட்ட அதிமுக சார்பில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் தற்போது வரை உறுதியாக நிற்கிறோம். சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் இணைய வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரது விருப்பமும் என்று சையது கான் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.