இளைஞர் தற்கொலை – காதல் விவகாரமா? என போலீஸ் விசாரணை

விழுப்புரத்தில் பி.இ பட்டதாரி இளைஞர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். காதல் விவகாரத்தில் தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த எஸ். கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதர்சன். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ படிப்பை முடித்துவிட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார். திடீரென வீட்டில் யாரும் இல்லாதபோது, இவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடல் முழுவதும் தீக்காயம் அதிகமாக இருந்ததால் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.
image
ஆனால் அதற்கு முன்னதாகவே இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அரகண்டநல்லூர் போலீசார் பி.இ பட்டதாரி இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதோ காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.