ஒரே வாரம் தான்… ஈபிஎஸ் கூடாரம் காலி.. ஓபிஎஸ் எடுத்த மாஸ்டர் முடிவு..!

ஓபிஎஸ்ஐ முதலமைச்சராக்காமல் எடப்பாடியை முதலமைச்சராக ஜெயலலிதா ஆக்கி இருந்தால் அம்மாவிற்கே துரோகம் செய்திருப்பார் எடப்பாடி, மீண்டும் ஜெயலலிதாவிடம் முதலமைச்சர் பதவியை அளித்திருக்க மாட்டார் என கோவை செல்வராஜ் தேனியில் பேட்டியளித்துள்ளார். கோவை செல்வராஜ் பேசியதாவது, கட்சிக்காக

உழைக்காவிட்டால் நான்கரை ஆண்டுகள் இபிஎஸ் முதல்வராக இருந்திருக்க முடியாது. சசிகலாவால் முதல்வரான இபிஎஸ் சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியது துரோகமா..? அதிமுக ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் பதவியை சசிகலாவுக்கு விட்டுக் கொடுத்தது துரோகமா? இபிஎஸ் கட்சியை கைப்பற்றி கம்பெனி நடத்த முயற்சிக்கிறார். ஜெயலலிதா மரணம் படுகொலை. ஒரு வாரத்திற்குள் ஈபிஎஸ் பக்கம் இருக்கும் நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் சேர்ந்து ஓபிஎஸ் தலைமையில் கட்சி வழி நடத்திச் செல்லப்படும்.

கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்ற ஓபிஎஸ் என்ற புலி பாயும்… ஓபிஎஸ் உழைக்காவிட்டால் ஒரு நாள் கூட இபிஎஸ் முதல்வராக இருந்திருக்க முடியாது. இபிஎஸ் கட்சியை கைப்பற்றி கம்பெனி நடத்த முயற்சிக்கிறார். ஒரு வாரத்திற்குள் ஈபிஎஸ் பக்கம் இருக்கும் நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் சேர்ந்து ஓபிஎஸ் தலைமையில் கட்சி வழி நடத்திச் செல்லப்படும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓ பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்காமல் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஆக்கி இருந்தால் ஜெயலலிதாவிடம் மீண்டும் முதலமைச்சர் பதவியை இபிஎஸ் கொடுத்திருக்க மாட்டார். அம்மாவிற்கே துரோகம் செய்திருப்பார். துரோகத்தின் முழு உருவமே ஈபிஎஸ் தான். கட்சியில் உள்ள சண்டைக்கும் குழப்பத்திற்கும் காரணம் ஜோக்கர் ஜெயக்குமார் தான்.

எனவே ஜெயக்குமார் போன்ற ஆட்கள் இனிமேல் கட்சியில் தலை தூக்க முடியாது. தலைமைச் செயலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே உள்ள பத்திரங்களை களவாடிச் சென்றுள்ளதாக இபிஎஸ் கூறுகின்றார்.

பத்திரங்களை என்ன வெளியிலா போட்டிருப்பார்கள். லாக்கரிலோ, பீரோவிலோ இருந்த பத்திரங்கள் காணவில்லை என்று கூறுவது அபத்தமானது.

அதனை ஓபிஎஸ் தரப்பினர் திருடி இருப்பார்கள் என்று நிரூபித்தால் தான் தற்கொலை செய்து கொள்ள தயார் என்று கோவை செல்வராஜ் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அவருடைய சுய லாபத்திற்காக எடப்பாடி கட்சியை கைப்பற்ற நினைக்கிறார் என்று நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர் அவர் அரசியலை விட்டு சென்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மீண்டும் கட்சியை கைப்பற்றி ஒரு கம்பெனி நடத்த நினைப்பது என்பது எடப்பாடி ரோஷம், சூடு சொரணை இல்லாதவர் என்பதை நிரூபிக்கின்றது என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், 2023 இல் அனைவரையும் ஒன்றிணைத்து ஒற்றை தலைமையில் ஓபிஎஸ் கட்சியை வழிநடத்தி வரும் தேர்தல்களில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என கோவை செல்வராஜ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.