மின்கசிவால் பற்றி எரிந்த வீடு.. உடல் கரகி பலியான் இளைஞர்..!

கோயம்புத்தூர் மாவட்டம், கூலை மூப்பனூரை சேர்ந்தவர் அர்ஜூன். இவர் திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் இரண்டு சிமெண்ட் சீட்டால் ஆன வீடு ஒன்றை அமைத்து வாழ்ந்து வருகிறார்.  சம்பவதன்று இவரது இரண்டாவது மகனை தாய் வீட்டில் விட்டுள்ளார். மேலும், ஒரு வீட்டில் மனைவி கஸ்தூரியும், மூத்த மகன் யஸ்வந்த்தும் தூங்கி கொண்டிருக்கவே அருகே சுற்றிலும் தென்னை ஓலையால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டு, மேற்கூரை , இரும்பு தகடால் அமைக்கப்பட்டு இருந்த மற்றொரு வீட்டில் அர்ஜூன் தூங்கியுள்ளார்.

அப்போது , எதிர்பாராத விதமாக வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பற்றியது. இதில், அர்ஜூன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி பலியானார். தென்னை ஓலையில் கட்டப்பட்ட வீடு என்பதால் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை என கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் மற்றும் காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.