ஹயாத் ஓட்டலில் புகுந்து தாக்குதல் நடத்திய அல் ஷபாப் இயக்க பயங்கரவாதிகள் – 8 பேர் பலி..!

சோமாலியா தலைநகரான மோகதிஷூவில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் புகுந்து அல் ஷபாப் இயக்கத்தை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு கார்களில் குண்டுகள் வெடித்த நிலையில், காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஓட்டல் அறை ஒன்றில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.